Home இலங்கை குற்றம் 200 மில்லியன் ரூபா பெறுமதியான திமிங்கல கழிவுடன் ஒருவர் கைது

200 மில்லியன் ரூபா பெறுமதியான திமிங்கல கழிவுடன் ஒருவர் கைது

0

வடக்கு மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் ராகம பகுதியில் வைத்து 10 கிலோகிராம் திமிங்கல கழிவு போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கையானது இன்று (25) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பு  

இலங்கை விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்போது, கைதான நபரிடம் இருந்து அபூர்வ திமிங்கல வாந்தி என அழைக்கப்படும் போதைப்பொருளின் (அம்பர்கிரிஸ்) பெறுமதி சுமார் 200 மில்லியன் ரூபா என பொலிஸார் கணித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொரடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version