Home இலங்கை அரசியல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விவசாய மற்றும் வர்த்தக அமைச்சுகள் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் அதிகாரிகள் குழுவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அரிசி விலை மற்றும் அது தொடர்பான தற்போதைய நிலவரங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அரிசி விலை தொடர்பான நிலவரங்கள் 

மேலும், அரிசி விலை தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

சந்தையில் அரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளன.

மேலும் அரிசியை சேகரித்து வைக்கும் மூன்றாம் தரப்பினர் குறித்து கவனம் செலுத்துமாறு விவசாய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version