Home இலங்கை குற்றம் கொழும்பில் வீதியில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்ட நபர்

கொழும்பில் வீதியில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்ட நபர்

0

கொழும்பின் புறநகர் பகுதியான கிரிபத்கொட நகரில் நபர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பரவிய தாக்குதல் காணொளி தொடர்பில் 2 சந்தேக நபர்களை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பெண் ஒருவர் தொடர்பில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மேலதிக விசாரணை

தாக்கப்பட்ட நபரும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் கிரிபத்கொட பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version