Home இலங்கை சமூகம் காங்கேசன்துறை துறைமுகத்தில் போதைப்பொருளுடன் சிக்கிய நபர்

காங்கேசன்துறை துறைமுகத்தில் போதைப்பொருளுடன் சிக்கிய நபர்

0

காங்கேசன்துறைமுகத்தில் 4 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

சென்னையை சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் இந்தியாவில் இருந்து நாகபட்டினம் துறைமுகம் ஊடாக கப்பல் வழியாக குறித்த போதைப்பொருளை எடுத்து வந்தவேளை சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பு

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் போதைப்பொருள் பொலிஸ் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version