Home இலங்கை சமூகம் யாழில் வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட வயோதிபர்

யாழில் வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட வயோதிபர்

0

யாழ். (Jaffna) வடமராட்சியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் நேற்று (12.12.2024) வடமராட்சி அல்வாய் மேற்கு – ஆண்டாள் தோட்டம் பகுதியில் மீட்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கந்தையா கணபதிப்பிள்ளை (வயது 86) என்ற வயோதிபரே இவ்வாறு சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.

காலையில் இருந்து கூக்குரல்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அவர் வீட்டில் தனிமையில் வசித்து வந்த நிலையில் நேற்றுக் காலையில் இருந்து
கூக்குரல் இட்டவாறு இருந்துள்ளார்.

பின்னர் சத்தம் கேட்காது இருந்த நிலையில் அயலவர்களால் கிராம அலுவலர் மற்றும்
பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது மேற்படி வயோதிபர் சடலமாகக்
காணப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்கு நேற்று இரவு சென்ற பருத்தித்துறை பதில் மரண விசாரணை அதிகாரி அன்ரலா வின்சன்தயான் விசாரணை செய்து உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொண்டு
அறிக்கை சமர்ப்பிக்குமாறு பருத்தித்துறைப் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version