Home இலங்கை சமூகம் நடுவானில் விமானத்திலேயே பயணி ஒருவர் மரணம்

நடுவானில் விமானத்திலேயே பயணி ஒருவர் மரணம்

0

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கொழும்பிலிருந்து சென்னைக்கு சென்ற இந்திய
பயணி ஒருவர் மாரடைப்பால் மரணமானார்.

ஆந்திராவை சேர்ந்த 45 வயதான கமல் பாசா என்பவரே, நடுவானில் விமானத்திலேயேஉயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடன் முதலுதவி அளிப்பு 

விமானம் பயணித்துக் கொண்டிருந்தபோது, இடையில் தமக்கு நெஞ்சு வலிப்பதாக அவர்
கூறியுள்ள நிலையில், விமானப் பணியாளர்கள் உடனடியாக முதலுதவி அளித்துள்ளனர்.

அத்துடன், அவசர உதவிக்காக சென்னை விமான நிலையத்துடன் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளதுடன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பயணியின் உயிரைக் காக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து, விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

NO COMMENTS

Exit mobile version