Home இலங்கை சமூகம் யாழில் தவறான முடிவெடுத்த நபர்: சகோதரியும் உயிர்மாய்க்க முயற்சி

யாழில் தவறான முடிவெடுத்த நபர்: சகோதரியும் உயிர்மாய்க்க முயற்சி

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) சகோதரன் உயிரிழந்த சோகத்தில் சகோதரியும் உயிர்மாய்த்துக் கொள்ள முயன்ற
நிலையில், உறவினர்களால் காப்பாற்றப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் (18) தவறான
முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதி 

இதனை தொடர்ந்து, உயிரிழந்த இளைஞரின் சகோதரியான இரண்டு மாத குழந்தையின் தாயாரும்
உயிர் மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார்.

இந்நிலையில், குறித்த பெண் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு சாவகச்சேரி
வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

Source: https://tamilwin.com/article/man-died-in-jaffna-sister-tried-to-die-too-1726818847

NO COMMENTS

Exit mobile version