Home இலங்கை சமூகம் வவுனியாவில் தொலைத் தொடர்பு கோபுரத்திலிருந்து வீழ்ந்து ஒருவர் பலி

வவுனியாவில் தொலைத் தொடர்பு கோபுரத்திலிருந்து வீழ்ந்து ஒருவர் பலி

0

வவுனியா (Vavuniya) – மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து
வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது இன்று (2) இடம்பெற்றுள்ளது.

மகாறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி
திருத்தப்பணிகளை முன்னெடுத்து வந்த ஊழியர் ஒருவர் நிலை தடுமாறி கீழே
வீழ்ந்துள்ளார்.

மேலதிக விசாரணை

இதனால் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் அனுராதபுரம் – நிக்கவரெட்டி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சத்துரங்க
ஹேரத் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தடவியல் பொலிஸாரின் உதவியுடன் வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version