Home இலங்கை சமூகம் அனுராதபுரத்தில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் மரணம்!

அனுராதபுரத்தில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் மரணம்!

0

அனுராதபுரத்தில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அனுராதபுரம் – ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட
சியம்பலாவ பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

பிரேத பரிசோதனை

ஹொரவ்பொத்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் என்று
ஹொரவ்பொத்தானை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்படி நபர் வீட்டில் இருந்து வெளியே சென்றபோது வீட்டுக்கு முன்பாக நின்று
கொண்டிருந்த காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்டது என்று ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version