Home இலங்கை சமூகம் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய மேற்பார்வையாளருக்கு நேர்ந்த கதி

தண்டவாளத்தில் படுத்து உறங்கிய மேற்பார்வையாளருக்கு நேர்ந்த கதி

0

கொழும்பில் (Colombo) இருந்து பதுளை நோக்கி சென்ற தொடருந்து மோதியதில் தொடருந்து கடவை மேற்பார்வையாளர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (19) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக பட்டிபொல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தியத்தலாவ பகுதியைச் சோர்ந்த 26 வயதுடைய சம்பத் சல்காடு
என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தண்டவாளத்தில் படுத்து உறங்கிய..

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற தொடருந்தில் பெரகும்புர – அம்பெவெல தொடருந்து நிலையங்களுக்கு இடையிடையே அதிகாலை 4:15 மணியளவில் மோதியதாலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தொடருந்து நிலையத்தில் தொடருந்து கடவை மேற்பார்வையாளராக பணி புரிந்து வருவதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன் தொடருந்து செல்லும் போது தண்டவாளத்தில் படுத்து உறங்கியது தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணை

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் அதே தொடருந்து ஏற்றி அம்பெவெல தொடருந்து நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பட்டிபொல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version