Home இலங்கை குற்றம் யாழில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை கடத்தியவர் கைது!

யாழில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை கடத்தியவர் கைது!

0

யாழ்ப்பாணம்- சுழிபுரத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் பொலிஸால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம் (10) வட்டுக்கோட்டை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த சந்தேகநபர் சுழிபுரத்தில் இருந்தே லொறியில் 3
மாடுகளை கடத்திச் செல்ல முற்பட்டவேளை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விசாரணை

இந்த நிலையில், சந்தேகநபரை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் மல்லாகம்
நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version