Home இந்தியா இருசக்கர வாகனத்தில் தெருநாயை கட்டி இழுத்துசென்ற நபர்: பதைபதைக்கும் காட்சி!

இருசக்கர வாகனத்தில் தெருநாயை கட்டி இழுத்துசென்ற நபர்: பதைபதைக்கும் காட்சி!

0

கர்நாடக (Karnataka) மாநிலம் உடுப்பி மாவட்டம் காபு தாலுகா சிருவா பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் தெரு நாயின் கழுத்தில் சங்கிலியை கட்டி அதனை தன்னுடைய இருசக்கர வாகனத்தின் பின்பக்கத்தில் கட்டி இழுத்து செல்லும் காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றைய (21)  தினம் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நாயின் கழுத்தில் சங்கிலியை கட்டி, பின் அதை தனது இருசக்கர வாகனத்தின் பின்பக்கத்தில் கட்டினார்.

கால்நடை மருத்துவமனை

அதனையடுத்து, அவர் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியதில் சிறிது தூரம் ஓடிய நாய், பின்னர் ஓடமுடியாமல் விழுந்துவிட்டது.இருப்பினும், அந்த நாயை தரதரவென இழுத்தபடி, அந்த நபர் வேகமாக இருசக்கர வாகனத்தை  ஒட்டி சென்றுள்ளர்.

இதனைப் பார்த்த பலர் அதிர்ச்சியடைந்து அவரை கடுமையாக கண்டித்துள்ளதுடன், சிலர் அவரின் பிடியில் இருந்து அந்த நாயை விடுவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, அரசு கால்நடை மருத்துவமனையில் நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காபு தாலுகா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version