மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்க்களுக்கு இடையில் பாரிய முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் (18) இடம்பெற்றுள்ளது.
குறித்த அமர்வு தவிசாளர் ஜெசீதன்
தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, அமர்வில் மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சந்தைகளின் அபிவிருத்தி
தொடர்பாக விவாதம் எழுந்துள்ளது.
கடுமையான வாக்குவாதம்
அதில், உறுப்பினர்களிடையே கடுமையான வாக்குவாதம்
இடம்பெற்ற நிலையில், இதனால் சபை தவிசாளரின் கட்டுப்பாட்டை மீறியுள்ளது.
இந்தநிலையில் திடீரென கோபமடைந்த தவிசாளர், இனி சபையை கடுமையாக நடாத்த வேண்டிய
தேவை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
கதைப்பதற்கு அனுமதி
அத்தோடு, கதைப்பதற்கு இனி அனுமதி தர முடியாது எனவும் திருப்பி எதிர்த்து
கதைக்காதீர்கள் எனவும் உறுப்பினர்களிடம் சாடியுள்ளார்.
இதையடுத்து, எமக்கு கதைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கதைப்பதற்கு அனுமதி வழங்க முடியாது என நீங்கள் கூற முடியாது எனவும் உறுப்பினர்கள் வாய்த்தர்க்கத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதனால் சபையில் அமைதின்மை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
