Home முக்கியச் செய்திகள் மன்னார் வைத்தியசாலையில் தாய் – சேயிற்கு நேர்ந்த கொடூரம் : சுகாஸ் அவசர கோரிக்கை

மன்னார் வைத்தியசாலையில் தாய் – சேயிற்கு நேர்ந்த கொடூரம் : சுகாஸ் அவசர கோரிக்கை

0

மன்னாரில் (Mannar) உயிரிழந்த தாய், சிசு ஆகியோரின் மரணத்திற்கான நீதி வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் (Kanagarathnam Sukhas) தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (19) பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாய், சேய் மரணங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்”உயிரிழந்த தாய், சிசு ஆகியோரின் மரணத்திற்கான உண்மையான காரணங்கள் கண்டறியப்பட வேண்டும்.

மருத்துவத் தவறு

அத்துடன், அவர்கள் மரண விவகாரத்தில் தவறுகள் நடைபெற்றிருக்குமாயின் தவறிழைத்தவர்களுக்குத் தண்டனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் வழங்கப்பட வேண்டும்.

மருத்துவத் தவறுகளால் எம்மவர்களின் உயிர்கள் அநியாயமாகக் காவு கொள்ளப்படுவதை சகித்துக்கொள்ள முடியாது.

எனவே, உரிய தரப்பினர் விரைந்து இதற்கு சரியான ஒரு தீர்வினை வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மன்னார் பொது வைத்தியசாலையில் தாய், சேய் உயிரிழந்தமை தொடர்பில் பகிரங்கமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென வன்னி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் சுகாதார அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version