Home இலங்கை அரசியல் ஜனாதிபதியின் பக்கம் தாவவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்: அம்பலப்படுத்தும் முன்னாள் அமைச்சர்

ஜனாதிபதியின் பக்கம் தாவவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்: அம்பலப்படுத்தும் முன்னாள் அமைச்சர்

0

ஐக்கிய மக்கள் சக்தியின் (Samagi Jana Balawegaya) மேலும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்வார்கள் என முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசர்களில் ஒருவருமான மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.

அலுத்கம பிரதேசத்தில் நடைபெற்ற இளைஞர் கூட்டமொன்றில் மனுஷ நாணயக்கார இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஐக்கிய மக்கள் சக்தியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.

மக்களின் வாக்குப் பலம் 

இந்த நிலையில், மக்களின் வாக்குப் பலம் கொண்ட மேலம் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலின் பிரசார மேடையில் ஏறுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும்,முன்னாள் அமைச்சர் மனுஷவின் இந்த கருத்து தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் இதுவரையில் எவ்வித பதில்களையும் அளிக்கவில்லை.

உடன்படிக்கை 

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickramasinghe) தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் 34 கட்சிகளும் கூட்டணிகளும் இணைந்து உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.

“இயலும் சிறிலங்கா“ எனப்படும் குறித்த உடன்படிக்கையானது, மக்களின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பவே கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் இது வெறுமனே ஒரு அரசியல் கட்சி அல்ல எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version