மாரி செல்வராஜ்
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இதை தொடர்ந்து கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய படங்களை இயக்கினார்.
கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த படம் வாழை. இவரது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து இப்படம் எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
கடைசியாக இவர் இயக்கிய பைசன் படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
விஜய் மகன் ஜேசனின் அந்த எண்ணம்.. நடிகர் விக்ராந்த் உடைத்த ரகசியம்!
ஓபன் டாக்!
இந்நிலையில், மாரி செல்வராஜ் பகிர்ந்த விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், ” கண்டிப்பாக நான் நடிகன் ஆக மாட்டேன். அதற்கு முக்கிய காரணம் நான் நடிகர் ஆகிவிட்டால் என் பின் வருவதற்கு ஒரு கூட்டம் உருவாகி விடும்.
நடித்தால் எளிதாக கடவுள் ஆகி விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. நான் கடவுள் ஆகவும் விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
