Home இலங்கை அரசியல் வாய்ப்பு கிடைத்தால் உயிர்த்தஞாயிறு தாக்குதல் மூளைசாலியை பிடிப்பேன்: பொன்சேகா சபதம்

வாய்ப்பு கிடைத்தால் உயிர்த்தஞாயிறு தாக்குதல் மூளைசாலியை பிடிப்பேன்: பொன்சேகா சபதம்

0

எனக்கு வாய்ப்பு கிடைத்தால், ஈஸ்டர் தாக்குதலின் மூளையாக செயல்பட்டவரை நிச்சயம் பிடிப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கட்சி அலுவலகத்தில் இன்று (21) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மூளையாக செயற்பட்டவர்கள் தலைமறைவாக

ஈஸ்டர் தாக்குதலுக்கு நேற்றைய தினம் ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், அந்த தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டவர்கள் இன்னமும் தலைமறைவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவுக்கு தண்டனை

அரச புலனாய்வுப் பிரிவினர் தாக்குதல் நடத்தப்படவுள்ள திகதி, நேரம், இடம் போன்றவற்றை அறிவித்திருந்தும் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத முன்னாள் அரச பாதுகாப்பு அமைச்சர் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். புலனாய்வுத்  தகவலை மறைத்த, அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.  

Source: https://ibctamil.com/article/mastermind-of-the-easter-attack-will-be-caught-1713702532

NO COMMENTS

Exit mobile version