எட்டு உயிர்களை காவு வாங்கிய காரைதீவு (Karaitivu)- மாவடிப்பள்ளி
பாதையை அரச அதிகாரிகள் இன்னும் கண்டு கொள்ளவில்லை என்று திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் (Ashraf Thahir) தெரிவித்துள்ளார்.
இந்தமுறை ஏற்பட்ட உயிர் சேதம் போன்று இன்னொரு முறை இடம்பெறாமல்
எதிர்காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள கவனம் செலுத்த
வேண்டும் எனவும் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உரிய நடவடிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில், வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு நாட்டில் இவ்வாறானதொரு
இடர் ஏற்பட போகிறது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்திருந்த போதும் அப்
பிரதேசத்தில் உள்ள அரச அதிகாரிகள் அப்பிரதேசத்தை பாதுகாக்க எடுத்த
நடவடிக்கைகள் என்ன என்பதை இந்த இடத்தில் நான் வினயமாக கேட்டுக் கொள்ள
விரும்புகிறேன்.
அதேபோல் மாவடிப்பள்ளி பாலம், கிட்டங்கி பாலம் ஆகிய பாலங்கள்
சரியாக நிர்மாணிக்கப்படாமையின் காரணமாக வெள்ள நிலைமைகளின் போது அப்பகுதியில்
உயிர் ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டி இருப்பதாகவும் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அஷ்ரப் தாஹிர் தெரிவித்துள்ளார்.