Home இலங்கை சமூகம் மே தின நிகழ்வுகளால் கொழும்பில் குவிந்த குப்பைகள்

மே தின நிகழ்வுகளால் கொழும்பில் குவிந்த குப்பைகள்

0

Courtesy: Chandana

கொழும்பில் இடம்பெற்ற மே தின பேரணிகள் காரணமாக பெருமளவான குப்பைகள் குவிந்து கிடந்தன வீதியோரங்களில் குவிந்து கிடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் நேற்று (01.05.2024) இடம்பெற்ற மே தின பேரணியின் பின்னர், இன்று (02.05.2024) காலை வரை கொழும்பில் பெருமளவான இவாவாறு குவிந்து கிடந்துள்ளன.

அரசியல் கட்சிகள், கொழும்பு நகரை மையப்படுத்தி பல மே தின பேரணிகளை நேற்று ஏற்பாடு செய்திருந்தன.

வாகன இறக்குமதிக்கான அனுமதி! முதலில் இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்கள்

மே தினப் பேரணி

ஆனால் மே தின பேரணிகள் முடிவடைந்த பின்னர் கொழும்பில் சில இடங்களில் இவ்வாறு குப்பைகள் குவிந்து கிடந்தன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினப் பேரணியின் பின்னர், கட்சியின் ஆதரவாளர்கள் பொரளையில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் குப்பைகளை வீசி சென்றுள்ளமை காணமுடிந்தது.

இன்று காலை பாடசாலைக்கு வந்த மாணவர்கள் அந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ஹைட் பார்க் பகுதியில் நடைபெற்ற முன்னிலை சோசலிச கட்சியின் மே தின பேரணியின் பின்னர் அவர்கள் குப்பைகளை சுத்தம் செய்திருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தின் பின்னர் அந்தப் பகுதியில் அதிகளவு குப்பைகள் குவிந்திருந்தன.

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின பேரணி இடம்பெற்ற கொழும்பு ஏ.இ.குணசிங்க விளையாட்டு மைதானம் இன்று காலை நகர சபை ஊழியர்களால் சுத்தம் செய்யப்பட்டது.

இதேவேளை தேசிய மக்கள் சக்தியின் பிரதான மே தின பேரணி கொழும்பு தாமரை தடாக சுற்றுவட்டத்தில் இடம்பெற்றதுடன் பேரணியின் பின்னர் துப்புரவு செய்யும் பணிகளை அவர்களே செய்திருந்தனர்.

அதேநேரம் நாடாளுமன்ற வாகன நிறுத்துமிடத்திலும் குப்பைகள் தேங்கி காணப்பட்டன.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமை

இலங்கையில் உயிருக்கு போராடிய தாயையும் மகளையும் காப்பாற்றிய பொலிஸார்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version