Home இலங்கை அரசியல் சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் மே தின பேரணிகள்

சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் மே தின பேரணிகள்

0

சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணிகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

உலகம் முழுவதும் மே தினம், உழைப்பாளர்களின் உரிமைக்காகக் கொண்டாடப்படுகின்ற நிலையில், இலங்கையின் கிழக்கு மாகாணத்திலும் பிரதான அரசியல் கட்சிகளால் மே தினப் பேரணிகள் நடாத்தப்படுகின்றன.

குறித்த பேரணிகளில் பொதுமக்கள் பலரும் பங்குபற்றி வருவதோடு பொலிஸார் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு

அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தலைமையில் மே தினப் பேரணி ஒன்று ஆரம்பமாகியுள்ளது.

இதில், கலந்துகொண்ட மக்கள் ‘ஒடுக்காதே ஒடுக்காதே தமிழர்களை ஒடுக்காதே’ மற்றும் ‘எமது நிலம் எமக்கு வேண்டும்’ போன்ற கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றுள்ளனர்.

மாத்தளையில் இடம்பெற்ற மே தின பேரணி

ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியில் கலந்து கொள்ள கொழும்பு நோக்கி படையெடுக்கும் மக்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version