Home இலங்கை அரசியல் யாழ்.உடுப்பிட்டியில் தமிழரசுக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்

யாழ்.உடுப்பிட்டியில் தமிழரசுக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்

0

இலங்கை தமிழரசுக் கட்சியின் உடுப்பிட்டித் தொகுதியின் உள்ளூராட்சி
வேட்பாளர்களை தெரிவு செய்யும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டமானது மந்திகை- மடத்தடியில் அமைந்துள்ள வடமராட்சி தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று(19) மாலை
இடம்பெற்றுள்ளது.

இந்தக் கூட்டமானது அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள
எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தலைமையில் இடம்பெற்றது.

ஆலோசனைக் கூட்டம்

பொதுச் செயலாளராக நியமனமாகிய பின் முதலாவது கட்சியின் ஆலோசனைக் கூட்டம்
என்பதனால் கட்சியின் கொடியை ஏற்றி வைத்த பின் கூட்டம் ஆரம்பமானது.

கட்சியின் ஆதரவாளர்களால் எம்.ஏ. சுமந்திரனுக்கு பொன்னாடை போர்த்தியும்
மாலை அணிவித்தும் கௌரவித்து வரவேற்றனர்.

NO COMMENTS

Exit mobile version