Home இலங்கை அரசியல் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு!

0

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தலைமையில் இன்று நடைபெற்றது.

37 உறுப்பினர்களைக் கொண்ட கரைச்சி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக 20 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பாக 06 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சார்பாக 04 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பாக 02 உறுப்பினர்களும் கரைச்சி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

வர்த்தமானி 

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக 02 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி சார்பாக 01 உறுப்பினரும், சுயேட்சைக்குழு சார்பாக 02 உறுப்பினர்களும் கரைச்சி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

கரைச்சி பிரதேச சபையை தமிழரசுக் கட்சி பெரும்பான்மை ஆசனங்களைக்கொண்டு கரைச்சி பிரதேச சபையை ஆட்சியமைத்தது.

தவிசாளராக அருணாச்சலம் வேழமாலிகிதனும் உபதவிசாளராக புஸ்பநாதன் சிவகுமார் தெரிவு செய்யப்பட்டு வர்த்தமானி வெளிவந்திருந்தது.

மேலும், இன்றைய முதல் கன்னியமர்வில் உறுப்பினர்களின் அறிமுக உரை மற்றும் கன்னி உரைகள் இடம்பெற்றன.  

NO COMMENTS

Exit mobile version