Home இலங்கை பொருளாதாரம் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவது குறித்து பேச்சுவார்த்தை

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவது குறித்து பேச்சுவார்த்தை

0

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அரிசி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்காலிக அடிப்படையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக அரிசி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை

அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக அரிசி இறக்குமதியின் போது எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக இவ்வாறு அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவது குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மீண்டும் அரிசியின் விலை அதிகரிக்கும் சாத்தியம் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சந்தையில் அரிசி தட்டுப்பாட்டை நீக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரியை நீக்க வேண்டும் அல்லது கட்டுப்பாட்டு விலையை நீக்க வேண்டுமென அரிசி இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளனர். 

Source: https://tamilwin.com/article/meeting-regarding-the-rice-countrol-price-1734918707

NO COMMENTS

Exit mobile version