Home முக்கியச் செய்திகள் வெளிநாட்டில் பிள்ளைகள் – யாழில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்

வெளிநாட்டில் பிள்ளைகள் – யாழில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) முதியவர் ஒருவர் மனவிரக்தியில் தவறான
முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் (09.03.2025) இடம்பெற்றுள்ளது.  

யாழ்ப்பாணம் 5 ஆம்
குறுக்கு தெருவைச் சேர்ந்த பா.ஜோசப் (வயது 86) என்பவரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணை

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபரின் மனைவி ஏற்கனவே உயிரிழந்து விட்டார்.

அவரது பிள்ளைகள் மூவர்
வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த முதியவர் நேற்றைய
தினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார்.

அவரது சடல மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிரேம்குமார் மேற்கொண்டார்.

NO COMMENTS

Exit mobile version