Home முக்கியச் செய்திகள் யாழில் மாடியில் இருந்து வெற்றிலை துப்ப முயற்சித்தவருக்கு நேர்ந்த துயரம்

யாழில் மாடியில் இருந்து வெற்றிலை துப்ப முயற்சித்தவருக்கு நேர்ந்த துயரம்

0

யாழில் (Jaffna) வெற்றிலை துப்ப முயற்சித்த ஒருவர் மாடியில் இருந்து கீழே விழுந்த
நிலையில் உயிரிழந்துள்ளார்.

நீர்வேலி, அச்செழு பகுதியை சேர்ந்த
சுப்பையா உதயராசா (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் கடந்த 22 ஆம் திகதி மேல் மாடியில் மேசன் வேலையில்
ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

சடலம் மீதான மரண விசாரணை

மழை பெய்து கொண்டிருந்த போது, இவர்
வெற்றிலை துப்புவதற்காக சட்டடத்தின் முகப்பு பகுதிக்கு சென்ற வேளை கால் தவறி
கீழே விழுந்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை
உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம்
உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

NO COMMENTS

Exit mobile version