Home இலங்கை சமூகம் மில்கோ பால் சேகரிப்பு நிறுவனத்தை தனியாருக்கு வழங்க வேண்டாம்: ஆர்ப்பாட்டத்தில் பண்ணையாளர்கள்

மில்கோ பால் சேகரிப்பு நிறுவனத்தை தனியாருக்கு வழங்க வேண்டாம்: ஆர்ப்பாட்டத்தில் பண்ணையாளர்கள்

0

மட்டக்களப்பில் (Batticaloa) மில்கோ பால் சேகரிப்பு நிறுவனத்தை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பால் பண்ணையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டமானது இன்று (16) மட்டக்களப்பு எருவில் பால் சேகரிப்பு நிலையத்திற்கு அருகிலிருந்த கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் தேங்காய் உடைத்து, கோசங்களை எழுப்பியவாறு எதிர்ப்பினை தெரிவித்தனர்.

மில்கோ பால் சேகரிப்பு நிறுவனம்

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பண்ணையாளர்கள், இதுவரை காலமும் எதுவித தடைகளும் இன்றி மில்கோ பால் சேகரிப்பு நிலையத்திற்கு
நாம் பாலை வழங்கி கொண்டு வருகிறோம். அதனால் எமக்கு இதுவரையில் எதுவித
இடர்பாடுகளும் இல்லை்.

எமக்கு மில்கோ நிறுவனம் வாராந்தம் முறையாக எமக்குரிய
கொடுப்பனவு வழங்குகிறது.

ஆர்ப்பாட்டம் தொடரும்

எமக்கு பிள்ளைகளின் கற்றல், மரணச் செலவு,
திருமணச்செலவு, உள்ளிட்ட பல செலவுகளுக்கும் மில்கோ நிறுவனத்தின் மேலதிக உதவிகளை
நல்கி வருகின்றனர்.

எனவே இவ்வாறான நிறுவனத்தை தனியாருக்கு வழங்குவதை நாம்
முற்றாக எதிர்கிறோம். எனவே இந்த விடயத்தை கருத்தில் கொண்டு மில்கோ நிறுவனத்தை
தனியாருக்கு வழங்குவதை நிறுத்தா விட்டால் எமது ஆர்ப்பாட்டம் மேலும் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version