Home இலங்கை அரசியல் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் பந்துல குணவர்தன

கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் பந்துல குணவர்தன

0

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான மக்கள் சந்திப்பு வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலையில் இடம்பெற்ற கூட்டத்திற்கு நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்துள்ளார்.

இந்த நிகழ்வானது திருகோணமலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று(12) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறைபாடுகள் 

அத்துடன், அமைச்சர் பந்துல குணவர்தன இலங்கை போக்குவரத்து சபையின் திருகோணமலை சாலைக்கு சென்று அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

மேலும் இந்த கலந்துரையாடலில், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கோரள, அமைச்சின் செயலாளர், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version