Home இலங்கை அரசியல் செவ்வந்தியுடன் தொடர்புடைய அனைவருக்கும் இது நடக்கும்…! எச்சரிக்கும் நீதி அமைச்சர்

செவ்வந்தியுடன் தொடர்புடைய அனைவருக்கும் இது நடக்கும்…! எச்சரிக்கும் நீதி அமைச்சர்

0

இஷாரா செவ்வந்தி உட்பட வெளிநாடுகளில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழுவினருடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே ஹர்ஷன நாணயக்கார இதனை குறிப்பிட்டுள்ளார்.  

அவர் மேலும் கூறுகையில்,“காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கைகளினால் இஷாரா செவ்வந்தி குழுவினர்
மற்றும் கெஹல்பத்தர பத்மே குழுவினர் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டு
இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

அனைவரும் கைது

இந்தப் பாதாள உலகக் குழுவினருடன் தொடர்புடைய அனைவரும் கைது
செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். 

இவர்கள் எவரும் தப்ப முடியாது. சந்தேகநபர்கள் எங்கு மறைந்து இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள். 

நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படும் நபர்கள் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். எவருக்கும் மன்னிப்பு கிடையாது.

போதைப்பொருள் வியாபாரிகளிடம்
இருந்தும்  பாதாள உலகக் குழுவினரிடம் இருந்தும் இந்த நாட்டை மீட்டெடுக்க
எமது அரசு சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்றார்.

NO COMMENTS

Exit mobile version