Home இலங்கை அரசியல் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர்

மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர்

0

Courtesy: thavaseelan

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் இடம்பெறுகின்ற மனிதநேய
கண்ணிவெடியகற்றும் பணிகளை நகர அபிவிருத்தி மற்றும் வீடு அமைப்பு
அமைச்சர் அருண கருணாதிலக மற்றும் பிரதி அமைச்சர் T.B.சரத், அமைச்சின் செயலாளர்
ரஞ்ஜித் ஆரியரத்ன உள்ளிட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியில்
ஈடுபடுகின்ற நிறுவனத்தின் பிரதிநிதிகளோடு கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இராணுவத்தினர் உள்ளிட்ட அனைத்து
தரப்பினரையும் உள்ளடக்கியதாக அவர்களது விடயங்களை கேட்டு அறியும் முகமான
கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version