இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகத்திடம் எரிசக்தி
அமைச்சர் குமார ஜெயக்கொடி தமது சட்டப்பூர்வ பிரதிநிதித்துவங்களைச்
செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2015 ஆம் ஆண்டு உரக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியபோது நிதியை முறைகேடாகப்
பயன்படுத்தியதாக குமார ஜெயக்கொடியின் மீது குற்றச்சாட்டுக்கள்
முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், தனக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முன் எழுத்துப்பூர்வமாக
தமது சமர்ப்பிப்பை பரிசீலிக்குமாறு அமைச்சர் கோரியுள்ளார்.
அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
முன்னதாக, அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க, லஞ்ச ஊழல்களுக்கு
எதிரான ஆணையகம், அதன் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்கவுக்கு ஒப்புதல்
அளித்திருந்தது.
இந்த நிலையிலேயே அமைச்சரின் சட்ட பிரதிநிதித்துவங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கேள்விப்பத்திர விடயம் ஒன்றில் 8 மில்லியன் ரூபாய் முறைகேடு செய்ததாக
கூறப்படும் குற்றச்சாட்டில் அமைச்சர் மற்றும் இருவர் மீது மேல் நீதிமன்றத்தில்
வழக்குத் தொடரப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
