Home இலங்கை அரசியல் வேலைநிறுத்தப் போராட்டங்கள் மிகப் பெரும் தவறு! அமைச்சர் நளிந்த விமர்சனம்

வேலைநிறுத்தப் போராட்டங்கள் மிகப் பெரும் தவறு! அமைச்சர் நளிந்த விமர்சனம்

0

எந்தவொரு கோரிக்கையை முன்னிட்டேனும் வேலைநிறுத்தப்போராட்டங்கள் மேற்கொள்ளப்படுவது மிகப் பெரும் தவறு என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விமர்சித்துள்ளார்.

நேற்று(18) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வேலைநிறுத்தப் போராட்டங்கள்

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

வேலைநிறுத்தப் போராட்டங்கள் காரணமாக இழக்கப்படும் 24 மணிநேரமோ அல்லது 48 மணிநேரமோ அதனை ஈடுசெய்ய அதன் பின்னரான ஒருவாரம் வரை கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

அதன் காரணமாக தொழிற்சங்கத் தலைவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன், நீங்கள் வீதிக்கு இறங்கி வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் செய்துவிடுவதால் மாத்திரம் எல்லாவற்றையும் செய்துவிட முடியாது.

வேலைநிறுத்தம் 

ஒருசில விடயங்கள் தொடர்பில் நாங்கள் அதனை மேற்கொள்ள திறைசேரியுடன் கலந்துரையாடல்களை நடத்த வேண்டியிருக்கும்.

அதற்காக குறிப்பிட்ட காலம் எடுக்கும். எனவே வேலைநிறுத்தம் மேற்கொள்வதால் ஒருசதத்துக்கும் பிரயோசனம் இல்லை என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version