எரிசக்தி அமைச்சகம் தம்மிடம் உள்ள 14 சொகுசு வாகனங்களை விற்பனை செய்வதற்கான
கேள்விப்பத்திரங்களை அழைத்துள்ளது.
தேவையற்ற பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்தவும், அரசு வளங்களை திறம்படப்
பயன்படுத்துவதை உறுதி செய்யவும் அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க, எரிசக்தி
அமைச்சர் குமார ஜெயக்கொடியின் உத்தரவின் பேரில் இந்த முயற்சி
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கேள்விப்பத்திர விண்ணப்பப் படிவங்களை எரிசக்தி
அமைச்சகத்திடமிருந்து பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு செய்ய வாய்ப்பு
விண்ணப்பம் கிடைத்தவுடன் வாகனங்களை ஆய்வு செய்ய விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு
வழங்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தகவலுக்கு, ஆர்வமுள்ளவர்கள், 0112 574 740 அல்லது 0112 574 941 என்ற தொலைபேசி
எண்களில் அமைச்சகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
