Home இலங்கை அரசியல் அநுரவுக்கு மாலைதீவிலிருந்து வந்த வாழ்த்து செய்தி

அநுரவுக்கு மாலைதீவிலிருந்து வந்த வாழ்த்து செய்தி

0

நடைபெற்று முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திசாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayaka) மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றி தொடர்பில் வெளியிட்ட வாழ்த்து செய்தியொன்றினை பதிவிட்டுள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில், “இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்கவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் இன்று உங்கள் குறிப்பிடத்தக்க தேர்தல் வெற்றியில், மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நட்பை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நான் நெருங்கிய அண்டை நாடுகளாக இருக்கின்றோம்.

உங்கள் புதிய பாத்திரத்தில் நீங்கள் மகத்தான வெற்றி பெற வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

அநுரவின் பதில்

இதேவேளை, குறித்த வாழ்த்துச் செய்திக்கு, உங்கள் அன்பான விருப்பங்களுக்கும், நமது இரு நாடுகளும் ஏற்கனவே அனுபவித்து வரும் நெருங்கிய உறவுகள் நமது பரஸ்பர நலனுக்காகவும், பிராந்தியத்தின் நலனுக்காகவும் நட்புறவை மேலும் வளர்க்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்” என அநுரகுமார திசாநாயக்க பதிலளித்துள்ளார்.

அநுர குமாரதிசாநாயக்க ஜனாதிபதியாகியதை தொடர்ந்து பல முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version