Home இலங்கை சமூகம் கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுதலை செய்ததால் விளக்கமறியலுக்கு சென்ற அதிகாரி!

கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுதலை செய்ததால் விளக்கமறியலுக்கு சென்ற அதிகாரி!

0

அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன, இன்று (09) காலை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து அவரை ஜூன் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தரவு

மொஹான் கருணாரத்ன, இன்று அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊழல் மற்றும் மோசடி குற்றங்களில் தொடர்புடைய கைதி ஒருவரை, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சட்டவிரோதமாக விடுதலை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மொஹான் கருணாரத்ன கைது செய்யப்பட்டார்.

NO COMMENTS

Exit mobile version