Home இலங்கை குற்றம் யாழில் வயோதிபப் பெண்ணிடம் நூதன முறையில் பணம் கொள்ளை!

யாழில் வயோதிபப் பெண்ணிடம் நூதன முறையில் பணம் கொள்ளை!

0

யாழ்ப்பாணம் (Jaffna) – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி பகுதியில் தனியாக வசித்து வரும் வயோதிபப் பெண் ஒருவரின் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று (6) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் குறித்த வீட்டுக்கு சென்று, தான் கமநலசேவை
திணைக்களத்தில் இருந்து வருகை தந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொலிஸார்  நடவடிக்கை

அத்தோடு, விவசாய அழிவுக்கு நட்ட ஈடாக குறித்த
பெண்ணுக்கு 2 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பணத்தை பெறுவதற்கு
50 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டும் எனவும்அவர் கூறியுள்ளார்.

இந்தநிலையில், உண்மையறியாத அந்த வயோதிபப் பெண் 50 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளார்.

இதன்போது, தான் ஏமாற்றப்பட்ட விடயம் பின்னர் தெரியவந்த நிலையில் இது குறித்து
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

மேலும், சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/money-was-stolen-from-an-elderly-woman-in-jaffna-1738868968

NO COMMENTS

Exit mobile version