Home சினிமா விவாகரத்து சர்ச்சைகளுக்கு இடையில் நடிகை ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட போட்டோ.. செம வைரல்

விவாகரத்து சர்ச்சைகளுக்கு இடையில் நடிகை ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட போட்டோ.. செம வைரல்

0

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய், 1994ம் ஆண்டு உலக அழகியாக பட்டம் பெற்றவர் இப்போதும் இந்திய மக்கள் மனதில் உலக அழகியாகவே வாழ்ந்து வருகிறார்.

நடிகர் விவேக் அவர்கள் கூட எந்திரன் பட விழாவில் எப்போதுமே எங்களுக்கு உலக அழகி ஐஸ்வர்யா ராய் தான் என கூறியிருப்பார்.

தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் என நடித்தவர் கடைசியாக பொன்னியின் செல்வன் படங்களில் நடித்தார்.

ஹிந்தியில் அதிக படங்கள் நடித்தவர் ஆங்கில படத்திலும் நடித்துள்ளார்.

வைரல் போட்டோ

அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை கடந்த 2007ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். கடந்த சில மாதங்களாகவே அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா விவாகரத்து செய்கிறார்கள் என்ற பேச்ச இருந்தது. இதுகுறித்து அவர்கள் எந்த ஒரு பேச்சும் பேசாமல் இருந்தனர்.

இந்த நிலையில் திருமண நாளில் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் மற்றும் மகளுடன் எடுத்த போட்டோவை பகிர்ந்து விவாகரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

Source: https://cineulagam.com/article/actress-aishwarya-rai-latest-photo-goes-viral-1745208623

NO COMMENTS

Exit mobile version