Home இலங்கை கல்வி பல்கலைக்கழக நுழைவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கூடுதல் புள்ளி

பல்கலைக்கழக நுழைவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கூடுதல் புள்ளி

0

பல்கலைக்கழக நுழைவுக்கான புள்ளி வழங்கலின் போது அறநெறிப்பாடசாலை ஆசிரியர் பரீட்சையில் சித்திபெற்றவர்களுக்கு ஒரு புள்ளியைக் கூடுதலாக வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அகில இலங்கை சாசன பாதுகாப்புச் சபையின் தலைவர் பேராசிரியர் தும்புல்லே சீலக்கந்த நாயக்க தேரர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையில் நடைபெற்றுள்ளது.

அறநெறிப்பாடசாலை ஆசிரியர் பரீட்சை

இதன்போது இலங்கையில் அறநெறிப்பாடசாலைக் கல்வியை பரவலாக்குவது மற்றும் வலுப்படுத்துவது குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

அதன் ஒருகட்டமாக அறநெறிப்பாடசாலை ஆசிரியர் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு பல்கலைக்கழக பிரவேசத்தின் போது கூடுதல் புள்ளியொன்றை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தற்போதைக்கு அதுகுறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய, கல்வி அமைச்சின் ஊடாக கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.  

Source: https://tamilwin.com/article/moral-school-teachers-exam-university-marks-1754805870

NO COMMENTS

Exit mobile version