Home இலங்கை அரசியல் ஒரே நாளில் சிக்கிய 5000இற்கும் மேற்பட்டோர்…

ஒரே நாளில் சிக்கிய 5000இற்கும் மேற்பட்டோர்…

0

இலங்கையில் நேற்று(10.10.2025) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு
நடவடிக்கையின் போது 5 ஆயிரத்து 763 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ்
ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும்
கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை
மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச் செயல்களுடன்
தொடர்பில் 24 பேரும், சந்தேகத்தின் பேரில் 696 பேரும், பிடியாணை உத்தரவு
பிறப்பிக்கப்பட்ட 329 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 174
பேரும்,மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தியமை தொடர்பில் 27 சாரதிகளும்,
கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 24 சாரதிகளும், ஏனைய
போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 4 ஆயிரத்து 489 பேரும் கைது
செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version