Home இலங்கை சமூகம் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற காதல் ஜோடிக்கு நேர்ந்த துயரம்

மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற காதல் ஜோடிக்கு நேர்ந்த துயரம்

0

மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற காதல் ஜோடி ஒன்று கால்வாய்க்குள் விழுந்ததில் இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் யுவதி படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் லபுகம, தும்மோதற பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பிலியந்தலை, பமுனுவ பன்சலை வீதியை சேர்ந்த , பசிந்து லக்சான்(வயது19) என்பவரே உயிரிழந்தவராவார்.படுகாயமடைந்த பெண் அம்பலாங்கொட கெனேன் பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது

அதி வேகமாக மோட்டார் சைக்கிளில் பயணம்

மேற்படி இருவரும் குளிப்பதற்காக களு அக்கல பகுதியிலிருந்து லபுகம நோக்கி அதி வேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்தவேளை பெல்போல பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கால்வாய்க்குள் விழுந்துள்ளனர்.

அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதி

உடனடியாக அப்பகுதி மக்களால் அவர்கள் மீட்கப்பட்டு அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதன்போது இளைஞன் உயிரிழந்துள்ளார்.

விபத்துக்குள்ளான பெண் ஆபத்தான நிலையில் , தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹன்வெல்ல காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version