Home இலங்கை அரசியல் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களை மீளப் பெற நடவடிக்கை!

அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களை மீளப் பெற நடவடிக்கை!

0

அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சிடம் உடன் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடவடிக்கை

ஆயுதங்களை பெற்றுக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் நூறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆயுதங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

   

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதனைத் தொடர்ந்து அவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வசதிகளும் ரத்தாவதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொடுப்பனவு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பணிக்குழாமிற்கான கொடுப்பனவு, எரிபொருள் கொடுப்பனவு மற்றும் முத்திரை கட்டணம் போன்ற வசதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

எனினும் மாதிவெலயில் காணப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரபூர்வ இல்லங்கள் தேர்தல் நடைபெறும் தினம் வரையில் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் தோல்வியடையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக அதிகாரபூர்வ இல்லகங்களை ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version