முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில்
இறுதி யுத்த காலத்தில் இராணுவத்திடம் பிள்ளைகளை கையளித்த தாய்மாரும், கணவர்களை கையளித்த மனைவிமாருமாக வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடி 2928 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் ஒவ்வொரு மகளிர் தினத்தையும் துக்க நாளாக அறிவித்து பாரிய ஆர்ப்பாட்டத்தை செய்து வரும் நிலையில் இன்றும் குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில் இந்த மகளிருக்கான பதில் என்ன என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்றையதின நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
