Home இலங்கை அரசியல் எம்பிக்களின் ஓய்வூதியம் இரத்து : துரித கதியில் செயற்படும் அரசாங்கம்

எம்பிக்களின் ஓய்வூதியம் இரத்து : துரித கதியில் செயற்படும் அரசாங்கம்

0

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சட்டமூலம் நீதி அமைச்சினால் தயாரிக்கப்பட்டு மேற்பார்வைக்காக சட்டமா அதிபருக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டது.

அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதி

தற்போதைய அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதியின்படி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version