Home இலங்கை அரசியல் 20 வருடங்களின் பின் மாமனிதரின் கல்லறைக்கு சென்ற மகன்

20 வருடங்களின் பின் மாமனிதரின் கல்லறைக்கு சென்ற மகன்

0

20 ஆண்டுகளுக்கு பின்னர் படுகொலை செய்யப்பட்ட தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் மகனான டேவிட் பரராஜசிங்கம் தந்தையின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டு சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் அவரது மகனான டேவிட் பரராஜசிங்கம் இலங்கை வருகை தந்துள்ளார்.

குறித்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் , உப முதல்வர், உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ்த்தேசிய அரசியலிலும் மிகப்பெரும் ஆளுமை

எனினும், மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன் மற்றும் சிறிநாத் ஆகியோர் குறித்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

இதன்போது, தமிழரசுக் கட்சியின் மாவட்ட மட்ட முக்கியஸ்தர்கள் குறித்த அஞ்சலி நிகழ்வில் பங்குபெறாமை டேவிட் பரராஜசிங்கத்தின் குடும்பத்தினருக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியிருக்கலாம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திலும் தமிழ்த்தேசிய அரசியலிலும் மிகப்பெரும் ஆளுமையாக திகழ்ந்த ஜோசப் பரராஜசிங்கம் துணை ஆயுதக் குழுக்களால் கொல்லப்பட்டார்.

2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். 

NO COMMENTS

Exit mobile version