Home இலங்கை அரசியல் சஜித்தை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்த திட்டம் – முஜிபுர் குற்றச்சாட்டு

சஜித்தை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்த திட்டம் – முஜிபுர் குற்றச்சாட்டு

0

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை மாற்றுவதற்கான உள் நடவடிக்கை குறித்த
வதந்திகளை நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நிராகரித்துள்ளார்.

அதே நேரத்தில் கட்சியையும் அதன் தலைவரையும் அரசியல் ரீதியாக பலவீனப்படுத்த
திட்டமிட்ட சதித்திட்டம் இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.

அரசாங்கத்தின் மறைமுக ஆதரவுடன்

சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்குவது குறித்து
கட்சிக்குள் எந்த விவாதமும் இல்லை என்று ரஹ்மான், ஊடக சந்திப்பில் ஒன்றில்
கூறினார்.

இருப்பினும், கட்சியையும் அதன் தலைவரையும் அரசியல் ரீதியாக அழிக்க சில கூறுகள்
செயல்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூறுகள் அரசாங்கத்தின் மறைமுக ஆதரவுடன் செயல்படுவதாகத் தெரிகிறது என்று
அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கிடையில், புதிய கூட்டணிகள் குறித்தும் ரஹ்மான் கருத்து தெரிவித்தார், தயாசிறி ஜெயசேகரா போன்ற அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளைக் கொண்டுவருவது ஒரு
சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

தயாசிறி ஒரு திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. அவரைப்
போன்றவர்களை கட்சிக்குள் வருவது கட்சியை பலப்படுத்தும் என்றும் முஜிபுர்
ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version