Home இலங்கை சமூகம் குருந்தூர்மலையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற சிவ வழிபாடு

குருந்தூர்மலையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற சிவ வழிபாடு

0

முல்லைத்தீவு (Mullaitivu) – குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் சிவ வழிபாடு இடம்பெற்றுள்ளது.

இந்த வழிபாடானது, இன்றையதினம் (18.06.2024) நடைபெற்றுள்ளது. 

அந்தவகையில், சிவனை தரிசிப்பதற்காக ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர் இன்று காலை 10 மணியளவில் பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

வழிபாட்டில் ஈடுபட்டோர் 

மேலும், குறித்த வழிபாட்டில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன்,

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் ஞா.யூட்சன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இ.ஜெகதீசன், ஆலய நிர்வாகத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, பொலிஸார் மற்றும் இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் சிவ வழிபாடு இடம்பெற்றுள்ளது.

அதேவேளை, தொல்லியல் துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய சேதம் ஏற்படுத்தாத வண்ணம் வழிபாடுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version