Home இலங்கை குற்றம் முல்லைத்தீவு பாடசாலை மாணவன் மீது ஆசிரியர் கொடூர தாக்குதல்

முல்லைத்தீவு பாடசாலை மாணவன் மீது ஆசிரியர் கொடூர தாக்குதல்

0

முல்லைத்தீவு (Mullaitivu) நகரப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பாடசாலை மாணவனை ஆசிரியர் ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த மாணவன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயர்தரத்தில் கல்வி கற்றுவரும் முல்லைத்தீவினை சேர்ந்த இந்த மாணவன் மீது
பாடசாலைக்குள் வைத்து ஆசிரியர் கைகளால் சரமாரியாக கன்னங்களில்
தாக்குதல் நடத்தியுள்ளார்.

மேலதிக விசாரணைகள்

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/mullaitivu-school-student-assaulted-by-teacher-1719129287

NO COMMENTS

Exit mobile version