Home சினிமா முத்துக்குமரனை தொடர்ந்து இரண்டு பணப்பெட்டியை தூக்கிய போட்டியாளர்கள்.. யார்யார் தெரியுமா, இதோ

முத்துக்குமரனை தொடர்ந்து இரண்டு பணப்பெட்டியை தூக்கிய போட்டியாளர்கள்.. யார்யார் தெரியுமா, இதோ

0

பணப்பெட்டி 

இறுதி வாரத்தை எட்டியுள்ள பிக் பாஸ் 8ல் தற்போது பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதுவும், இதுவரை எந்த ஒரு பிக் பாஸ் சீசனிலும் நடக்காத வகையில், பணப்பெட்டியை எடுக்கும் நபர், போட்டியை தொடரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வீட்டிற்கு வெளியே இருக்கும் பணப்பெட்டியை குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்து வரவில்லை என்றால், அந்த போட்டியாளர் அப்படியே வெளியேறிவிடுவார் என்றும் கூறியுள்ளனர்.

பணப்பெட்டியை தூக்கிய போட்டியாளர்கள்

இது எப்படி இருக்க போகிறது என 6 பைனலிஸ்ட் போட்டியாளர்களும் பீதியில் இருந்த நிலையில், முதல் நபராக களமிறங்கி ரூ. 50,000 கைப்பற்றினார் முத்துக்குமரன். அவரை தொடர்ந்து களத்தில் இறங்கிய ரயான் ரூ. 2 லட்சத்தை எடுத்தார்.

மேலும் தற்போது மூன்றாவது நபராக சென்ற பவித்ரா ரூ. 2 லட்சத்தை கைப்பற்றியுள்ளனர். இதுவரை நடந்த இந்த பணப்பெட்டி டாஸ்கில் போட்டியாளர்கள் ரூ. 4.5 லட்சம் எடுத்துள்ள நிலையில், பரிசு தொகை ரூ. 45.5 லட்சம் மீதம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://cineulagam.com/article/muthukumaran-rayan-pavithra-take-money-box-in-bb8-1736935782

NO COMMENTS

Exit mobile version