வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவத்தின் 21ஆவது நாள் தங்க ரத திருவிழா நேற்றையதினம் சிறப்பாக நடைபெற்றது.
வியாழக்கிழமையான நேற்று (29.08.2024)மாலை முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சகிதம் தங்க ரதத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள் வழங்கினர்.
பெருந்திரளான பக்தர்கள்
இதன்போது பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில், எதிர்வரும் 31ஆம் திகதி மாலை சப்பரத் திருவிழாவும் 01ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் 02ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளது.