Home இலங்கை அரசியல் மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமலே! அடித்துக்கூறும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமலே! அடித்துக்கூறும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

0

எதிர்வரும் 2029 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் பட்சத்தில் ஸ்ரீலங்கா
பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் நாமல் ராஜபக்சவே வேட்பாளராக களமிறங்குவார் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் எமது கட்சியில் அவரே சிறந்த வேட்பாளராக உள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. சவாலை ஏற்கக்கூடிய தலைவருக்கே
நாட்டு மக்கள் ஆதரவளிப்பார்கள். கட்சிகளும் இத்தகைய நபரையே ஆதரிக்கும்.

கடந்த முறை நெருக்கடியான சூழ்நிலையிலும் நாமல் ராஜபக்ச போட்டியிட்டார்.

எமது
கட்சியில் தற்போதுள்ள சிறந்த வேட்பாளர்தான் நாமல் ராஜபக்ச அவர்தான் ஜனாதிபதி
வேட்பாளர். தன்னை அவர் பலப்படுத்திக் கொண்டு வருகின்றார்.” என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version