Home இலங்கை பொருளாதாரம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மத்திய வங்கியின் ஆளுநர் விசேட சந்திப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மத்திய வங்கியின் ஆளுநர் விசேட சந்திப்பு

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) இன்று (03) அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாட்டின் தற்போதைய நிதி நிலை குறித்து விரிவான விளக்கமொன்றை வழங்கவுள்ளார். 

சபாநாயகர் மகிந்த யாப்ப அபேவர்தனவினால் இந்த விசேட அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அமர்வு, நாட்டின் பொருளாதாரப் பாதை குறித்து சட்டமியற்றுபவர்களுக்கு தெரியப்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றது. 

நாட்டின் நிதி நிலைமை 

முன்னதாக, 2023ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய வங்கி திருத்தச் சட்டமூலத்திற்கு அமைய  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மத்திய வங்கியின் பிரதானிகளுக்கும் இடையிலான இந்த விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளது. 

2022ஆம் ஆண்டு நெருக்கடியின் பின்னர், இது போன்ற நிகழ்வுகள், அவ்வப்போது ஏற்பாடு செய்யப்பட்டு வருவதுடன் நாட்டின் நிதி நிலைமைகள் குறித்து  நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெளிவுப்பெறும் வகையில் இந்த நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. 

அந்தவகையில், சட்டமியற்றும் செயல்பாட்டிற்குள் தகவலறிந்து முடிவெடுக்கும் மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிப்பதற்கான ஒரு முக்கிய படியாக இந்த முயற்சி கருதப்படுகிறது. 

இதற்கமைய, சவாலான பொருளாதார நிலப்பரப்பில் இலங்கை பயணிக்கும் நிலையில், தற்போதைய பொருளாதார பிரச்சினைகளை திறம்பட கையாள்வதற்கு தேவையான நுண்ணறிவுகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களை சித்தப்படுத்துவது இந்த மாநாட்டின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/nandalal-weerasinghe-is-meeting-mp-s-1725359371

NO COMMENTS

Exit mobile version